/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஸ்ரீநிவாஸ திருக்கல்யாண ம ேஹாத்ஸவம் கோலாகலம்
/
ஸ்ரீநிவாஸ திருக்கல்யாண ம ேஹாத்ஸவம் கோலாகலம்
ADDED : டிச 16, 2024 03:32 AM
சேலம்: தமிழ்நாடு பிராமணர் சங்கம், ஜாகீர் அம்மாபாளையம், சுப்ரம-ணிய நகர் கிளை சார்பில், 7ம் ஆண்டாக, ஸ்ரீநிவாஸ கல்யாண ம ேஹாத்ஸவ நிகழ்ச்சி, சேலம், ஸ்வர்ணபுரியில் நேற்று முன்-தினம் தொடங்கியது.
2ம் நாளான நேற்று காலை முதல் பல்-வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீநிவாஸ உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து அலர்மேல் மங்கை, ஸ்ரீநிவாஸ பெருமாள் படத்துக்கு பட்டாடை உடுத்தி சிறப்பு பூஜை, அர்ச்சனைகள் நடந்-தன. பின் கூடியிருந்த பக்தர்கள் முன்னிலையில் மாங்கல்யத்தை காட்டி, மேள தாளம் முழங்க, பெருமாள், அலர்மேல் மங்கை தாயாருக்கு கல்யாணம் நடந்தது. பக்தர்கள், 'கோவிந்தா கோவிந்தா' என கோஷம் எழுப்பி வழிபட்டனர். இதில் சங்க கிளை தலைவர் வெங்கட்ராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்-றனர். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

