/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மணல் கடத்தலில் ஈடுபட்ட காரை தப்பவிட்ட எஸ்.எஸ்.ஐ., - போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
/
மணல் கடத்தலில் ஈடுபட்ட காரை தப்பவிட்ட எஸ்.எஸ்.ஐ., - போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
மணல் கடத்தலில் ஈடுபட்ட காரை தப்பவிட்ட எஸ்.எஸ்.ஐ., - போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
மணல் கடத்தலில் ஈடுபட்ட காரை தப்பவிட்ட எஸ்.எஸ்.ஐ., - போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஆக 14, 2025 02:47 AM
மோகனுார், மணல் கடத்தலில் ஈடுபட்ட காரை, ஏ.எஸ்.பி., பிடித்த நிலையில், அதை தப்பவிட்ட எஸ்.எஸ்.ஐ., மற்றும் போலீஸ்காரர் ஆகிய இருவரையும், நாமக்கல் எஸ்.பி., சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
கரூர் மாவட்டம், வாங்கலில் மணல் கடத்திக்கொண்டு, மோகனுார் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்வதாக, நாமக்கல் எஸ்.பி., விமலாவிற்கு தகவல் வந்தது. அவரது உத்தரவுப்படி, ஏ.எஸ்.பி., ஆகாஷ் ஜோஷி தலைமையில், கடந்த, 11 அதிகாலை, நாமக்கல் - திருச்சி சாலை, வளையப்பட்டி பகுதியில் வாகன சோதனை நடந்தது.
அப்போது ஒரு டிப்பர் லாரி மற்றும் 'மாருதி ஸ்விப்ட்' கார் வந்தது. சந்தேகமடைந்த ஏ.எஸ்.பி., லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் மணல் இருந்தது. விசாரணையில், வாங்கலில் இருந்து கடத்தி வந்ததும், கார் மற்றும் டிப்பர் லாரி, கரூர் மாவட்டம், மாயனுாரை சேர்ந்தது என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, டிப்பர் லாரி, காரை ஸ்டேஷனுக்கு எடுத்து வரும்படி, மோகனுார் எஸ்.எஸ்.ஐ., சங்கர் மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டுவிட்டு, ஏ.எஸ்.பி., ஸ்டேஷனுக்கு சென்று காத்திருந்தார். டிப்பர் லாரி மட்டும் வந்த நிலையில் கார் வரவில்லை. இதுகுறித்து எஸ்.எஸ்.ஐ.,யிடம் விசாரித்தபோது, 'ஸ்டார்ட் ஆகாததால் உரிமையாளரை எடுத்து வரச்சொல்லியுள்ளேன்' என, தெரிவித்துள்ளார். இதனால் கடுப்பான ஏ.எஸ்.பி., ஆகாஷ் ஜோஷி, எஸ்.எஸ்.ஐ., சங்கர், போலீஸ்காரர் கோவிந்தராஜூ ஆகிய இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, எஸ்.பி., விமலாவுக்கு பரிந்துரைத்தார். அதை தொடர்ந்து, நேற்று முன்தினம் நாமக்கல் ஆயுதப்
படைக்கு, சங்கர், கோவிந்தராஜூ ஆகிய இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், நேற்று இருவரையும், நாமக்கல் எஸ்.பி., விமலா, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.