ADDED : ஆக 19, 2026 05:43 AM
அ நிறம் | அளவு
சேலம்:கருப்பூர்
அருகே, வெள்ளாளப்பட்டி, பழைய நகரை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன்
ஸ்ரீதேவ், 14. வெள்ளாளப்பட்டி அரசு பள்ளியில், 9ம் வகுப்பு படித்து
வந்தார். நேற்று மாலை, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவர், சக
மாணவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது
அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் சக மாணவர்கள் சேர்ந்து
புகார் தெரிவிக்க, ஸ்ரீதேவை, அவரது தந்தை கண்டித்தார். பின் அவர் வெளியே
சென்ற நிலையில், மன வேதனையில் இருந்த ஸ்ரீதேவ், வீட்டில் துாக்கிட்டு
தற்கொலை செய்து கொண்டார். கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
