ADDED : டிச 23, 2024 10:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து நல்லியாம்புதுாரை சேர்ந்த விவசாயி கார்த்தீபன், 45. அவரது மகன் ஜெகதீஷ், 20. இவர், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், 2ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று மதியம், 12:00 மணிக்கு, ஜெகதீஷ், நண்பர்களுடன் தும்பல்பட்டி ஊராட்சி அடிமலைப்பட்டி சென்றார். அங்கு கிடமலை அடிவாரத்தில் உள்ள கரடி குட்டை ஏரியில் குளித்தார். துாரமாக நீந்தி சென்று திரும்பியபோது, ஜெகதீஷ் மூழ்கி உயிரிழந்தார். உறவினர்கள், உடலை மீட்டனர். பனமரத்துப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.