நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், அன்னதானப்பட்டி, படையப்பா காலனியை சேர்ந்தவர் மாதையன், 58. இவர், 5 மாதங்களுக்கு முன், இடைப்பாடியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில், ஆனந்தி, 19, என்பவரை தத்-தெடுத்தார். தொடர்ந்து அவரை, சேலத்தில் உள்ள, தனியார் பாலி-டெக்னிக்கில் சேர்க்க, முதலாம் ஆண்டு படிக்கிறார். நேற்று முன்-தினம் கல்லுாரி சென்ற அவர், வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், மாதையன் புகார்படி, அன்னதானப்-பட்டி போலீசார் விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'மாணவியின் தோழிகளிடம் விசாரித்ததில், மாதையன் வீட்டில் இருக்க விருப்பம் இல்லை என, ஆனந்தி கூறியுள்ளார் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.

