sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சாலையை கடக்க மாணவர்கள் சிரமம் பாதுகாப்பு பணிக்கு போலீசார் தேவை

/

சாலையை கடக்க மாணவர்கள் சிரமம் பாதுகாப்பு பணிக்கு போலீசார் தேவை

சாலையை கடக்க மாணவர்கள் சிரமம் பாதுகாப்பு பணிக்கு போலீசார் தேவை

சாலையை கடக்க மாணவர்கள் சிரமம் பாதுகாப்பு பணிக்கு போலீசார் தேவை


ADDED : ஜூன் 16, 2025 06:56 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: மல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு மாதிரிப்பள்ளி ஆகியவற்றில், 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்-கின்றனர். சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை, மல்லுார் ஊருக்கு வெளியே செல்கிறது. தற்போது நெடுஞ்சாலையில் மல்லுார் பிரிவில் பாலம் கட்டுமானப்பணி நடக்கிறது.

இதனால் நாமக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்-களில் இருந்து வரும் வாகனங்கள், மல்லுார் அரசு மேல்நிலைப்-பள்ளி வழியே சேலம் செல்கிறது. காலை, மாலையில், ஏராள-மான வாகனங்கள், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மாதிரிப்-பள்ளி வழியே செல்வதால், மாணவ, மாணவியர் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.குறிப்பாக காலையில் பள்ளி தொடங்கும்போதும், மாலையில் பள்ளி விடும் நேரத்தின்போதும், பள்ளி முன் போலீசார் பாது-காப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.

மாணவ, மாணவியர் சாலையை கடக்கவும், சாலையோரம் நடந்து செல்லவும், வெண்ணந்துார் போலீசார் உதவி செய்ய வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us