ADDED : செப் 03, 2026 02:00 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலையில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து, போதைப்பொருள் இல்லா விழிப்புணர்வு மற்றும் தற்கொலை தடுப்பு நிகழ்ச்சியை நேற்று நடத்தின. பல்கலை பதிவாளர் ராஜ் தலைமை வகித்தார்.
சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மகேந்திரன், போதை பொருட்களிலிருந்து விலகி இருப்பதன் அவசியம், மன-நலம், தற்கொலை தடுப்பு குறித்து, மாணவர்களுக்கு விழிப்பு-ணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, 'செல்பி பாயின்ட்', போதைப்-பொருள் எதிர்ப்பு உறுதிமொழி, கையெழுத்து இயக்கம், விழிப்பு-ணர்வு சுவரொட்டி கண்காட்சி நடந்தது. பல்கலை மாணவர்கள், மாவட்டத்தில் உள்ள, 10 இணைப்பு கல்லுாரிகளை சேர்ந்த ஒய்.ஆர்.சி., தன்னார்வலர்கள், திட்ட அலுவலர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
