ADDED : மார் 10, 2024 02:28 AM
அ நிறம் | அளவு
சேலம், இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு சார்பில் தேசிய டேக்வாண்டோ நடுவர் பயிற்சி முகாம், சேலத்தில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு டேக்வாண்டோ சங்க பொதுச்செயலர்
செல்வமணி தொடங்கி வைத்தார். அதில், 3 நாட்களுக்கு, டேக்வாண்டோ நடுவராக பணிபுரிவது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
