sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 29, 2025 ,கார்த்திகை 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பள்ளி மாணவியருக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க ரூ.15 கோடி ஒதுக்கியது அரசு

/

பள்ளி மாணவியருக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க ரூ.15 கோடி ஒதுக்கியது அரசு

பள்ளி மாணவியருக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க ரூ.15 கோடி ஒதுக்கியது அரசு

பள்ளி மாணவியருக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க ரூ.15 கோடி ஒதுக்கியது அரசு


ADDED : ஜூலை 25, 2025 01:06 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் :அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு, ஆக., 1 முதல், கராத்தே உள்ளிட்ட தற்காப்பு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டு, 15.49 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில், அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் படித்து வரும் மாணவியருக்கு, 3 மாதங்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு, 6,045 நடுநிலைப்பள்ளிகளில், 6 முதல், 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு பயிற்சி அளிக்க, 7.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 5,804 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், கூடுதல் மாணவியருக்கு பயிற்சி அளிக்க வசதியாக, 8.23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்ககம், சமீபத்தில் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

ஒவ்வொரு பள்ளிக்கும், பயிற்சியாளர் ஊதியமாக, மாதம், 4,000 ரூபாய் நிர்ணயித்து, 3 மாதங்களுக்கு, 12,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கராத்தே, ஜூடோ, டேக்வாண்டோ, சிலம்ப பயிற்சிகளில் ஒன்றை, பள்ளி மேலாண் குழுவினர் தேர்வு செய்து, அதற்கான பயிற்சியாளரை நியமித்துக்கொள்ளலாம். வாரத்தில், 2 நாட்கள் வீதம், 3 மாதங்களுக்கு, 24 வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு பள்ளியில் குறைந்தபட்சம், 10 பேருக்கு குறையாமலும், அதிகபட்சம், 100 மாணவியருக்கு மிகாமலும் இருக்க வேண்டும். பயிற்சிக்கு எக்காரணம் கொண்டும், வேறு பள்ளிக்கு மாணவியரை அழைத்துச்செல்லக்கூடாது. பெண் பயிற்றுனர்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். ஆக., 1 முதல், பயிற்சி வகுப்பை தொடங்க வேண்டும்.






      Dinamalar
      Follow us