sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

டிச., 13ல் 'மக்கள் நீதிமன்றம்'நிலுவை வழக்கை தீர்க்கலாம்

/

டிச., 13ல் 'மக்கள் நீதிமன்றம்'நிலுவை வழக்கை தீர்க்கலாம்

டிச., 13ல் 'மக்கள் நீதிமன்றம்'நிலுவை வழக்கை தீர்க்கலாம்

டிச., 13ல் 'மக்கள் நீதிமன்றம்'நிலுவை வழக்கை தீர்க்கலாம்


ADDED : நவ 28, 2025 01:36 AM

Google News

ADDED : நவ 28, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் மாவட்டத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம், டிச., 13ல் நடக்க உள்ளது. அதில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்த்துக்கொள்ளலாம்.இதுகுறித்து சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி அறிக்கை:சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், சங்ககிரி, ஆத்துார், மேட்டூர், ஓமலுார், இடைப்பாடி, வாழப்பாடி, ஏற்காடு நீதிமன்றங்களில், டிச., 13ல், தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்க உள்ளது.

அதில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள், நீதிமன்ற முன் வழக்குகளை விரைவாகவும், சமரச முறையிலும், இலவசமாக தீர்வு காணலாம். அங்கு முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல் முறையீடும் கிடையாது. நீதிமன்ற கட்டணங்களை திரும்ப பெற வாய்ப்புள்ளது.அதனால் சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை, வங்கி, கல்வி கடன்கள், மோட்டார் வாகன விபத்து, விவாகரத்து தவிர்த்த குடும்ப பிரச்னை, தொழிலாளர் நலன், உரிமையியல் வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, சொத்து வரி பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us