/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மதுபான விவகாரத்தில் ஆட்சியை இழக்கும் சூழல்'
/
'மதுபான விவகாரத்தில் ஆட்சியை இழக்கும் சூழல்'
ADDED : மார் 17, 2025 03:54 AM
பனமரத்துப்பட்டி: பா.ஜ., சார்பில், வீரபாண்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், கெஜ்ஜல்நாயக்கன்-பட்டியில் உள்ள, சேலம் லோக்சபா தொகுதி அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்-முகநாதன் பேசியதாவது:
டில்லி, சத்தீஸ்கர், தெலுங்கானா அரசுகள் மதுபான விவகாரத்தில் ஆட்சியை இழந்துள்ளன. அதற்குண்டான சூழல் தமிழகத்தில் நடக்கிறது. சேலம் கிழக்கு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை-களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். ஓமலுாரில் ஏப்., 19ல் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் தேசிய தலைவர்கள் பங்கேற்பர். ஏராளமானோரை திரட்டி, மாநாட்டில் பங்கேற்க செய்ய வேண்டும்.