/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தடுப்பணையில் தவறி விழுந்த வாலிபர் பலி
/
தடுப்பணையில் தவறி விழுந்த வாலிபர் பலி
ADDED : செப் 10, 2024 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்: பெரியேரி தடுப்பணையில், தவறி விழுந்த வாலிபர் உயிரி-ழந்தார்.தலைவாசல் அருகே, பெரியேரி கிராமத்தை சேர்ந்த தீனத-யாளன் மகன் அருண்குமார், 24. மன நலம் பாதித்த நிலையில் இருந்த இவர், நேற்று பெரியேரி வழியாக செல்லும் வசிஷ்டநதி குறுக்கே கட்டியுள்ள தடுப்பணைக்கு சென்றுள்ளார். தடுப்பணை பகுதியில் நடந்து சென்றபோது, தவறி விழுந்துள்ளார்.
அதையறிந்த அப்பகுதியினர், அருண்குமாரை தேடிய நிலையில், இறந்த நிலையில் அவரது உடலை மீட்டனர். தலை-வாசல் போலீசார், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வரு-கின்றனர்.