/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீஸ் ஸ்டேஷன் முன் நின்ற லாரி டயர்கள், டீசல் திருட்டு
/
போலீஸ் ஸ்டேஷன் முன் நின்ற லாரி டயர்கள், டீசல் திருட்டு
போலீஸ் ஸ்டேஷன் முன் நின்ற லாரி டயர்கள், டீசல் திருட்டு
போலீஸ் ஸ்டேஷன் முன் நின்ற லாரி டயர்கள், டீசல் திருட்டு
ADDED : ஜன 09, 2024 10:29 AM
காரிப்பட்டி: காரிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் முன் நின்ற லாரியின் டயர்கள், டீசல் திருட்டு போனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாழப்பாடி அடுத்த சின்னகவுண்டாபுரம் பகுதியில், அரசு புறம்போக்கு நிலத்தில் மண் கடத்திய, நான்கு டிப்பர் லாரி மற்றும் ஹிட்டாச்சி இயந்திரத்தை, கடந்தாண்டு மே, 4ல் வருவாய்த் துறையினர் புகார்படி, காரிப்பட்டி போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து நான்கு டிப்பர் லாரி மற்றும் ஹிட்டாச்சி இயந்திரம் காரிப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திடீரென இரு டிப்பர் லாரிகளில் இருந்த ஐந்து டயர்கள், டீசல் திருடப்பட்டுள்ளது. இதையடுத்து டிப்பர் லாரிகளின் உரிமையாளரான பாலசுப்பிரமணி, அசோகன் ஆகியோர், லாரி டயர் இல்லாமல் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, காரிப்பட்டி போலீசாரிடம் நேற்று கேட்டுள்ளனர். மேலும் லாரியில் இருந்த டயர்களை, கண்டுபிடித்து தருமாறு புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் நவாஸ் கூறுகையில்,'' போலீஸ் ஸ்டேஷன் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் லாரியின், ஐந்து டயர்கள், டீசல் திருட்டு போன தகவல் தெரியாது,'' என்றார்.