ADDED : ஜூலை 22, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம், தாரமங்கலம் எஸ்.ஐ., அழகுதுரை தலைமையில் போலீசார், பவளத்தானுார் ரவுண்டானா பகுதியில், நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனைக்கு நிறுத்தினார். அதில் இடைப்பாடி கருமன் கொட்டாயை சேர்ந்த முருகேசன், 53, அரசு உரிமம் இன்றி 4 யூனிட் செம்மண் கடத்தி வந்தது தெரிந்தது. செம்மண்னுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, முருகேசனை கைது செய்தனர்.