/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயில்வே அமைச்சருக்கு திருப்பூர் எம்.பி., கடிதம்
/
ரயில்வே அமைச்சருக்கு திருப்பூர் எம்.பி., கடிதம்
ADDED : டிச 07, 2024 07:36 AM
திருப்பூர்: திருப்பூர் எம்.பி., சுப்பராயன், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அனுப்பியுள்ள கடிதம்: திருப்பூர் லோக்சபா தொகுதியில், அந்தியூர், பவானி, கோபிச்செட்டிபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய, இரண்டு ரயில்வே
திட்-டங்கள், கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சத்தி - கோபி - ஈரோடு இடையே உள்ள, 69.3 கி.மீ., அகல ரயில்பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது; பிறகு நடவடிக்கை
இல்லை. இவ்வழித்தடத்தில், எட்டு ரயில்வே ஸ்டேஷன்கள் அமையும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.சத்தியமங்கலம் - அந்தியூர் - மேட்டூர் ரயில் திட்டம் தொடர்-பான ஆய்வு முடிந்து, 2006ல் அரசுக்கு அறிக்கை
சமர்ப்பிக்கப்பட்-டது; ஒன்பது ரயில்வே ஸ்டேஷன்களுடன் கூடிய இத்திட்டத்தில், அதன் பிறகு நடவடிக்கை இல்லை. இரு
திட்டங்களையும் செயல்படுத்தினால், மூன்று தொகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்-கான மக்கள் பயன்பெறுவர். மஞ்சள்,
பருத்தி, வாழை மற்றும் பூக்கள் போன்ற விளை பொருட்களை, அருகே உள்ள நகர்ப்பகு-திக்கு கொண்டு செல்வது
எளிதாகும். இத்தொகுதிகளை, ஈரோடு சந்திப்புடன் இணைத்தால், நாட்டின் அனைத்து பகுதிகளுடன் இணைப்பு ஏற்படும்.
மூன்று தொகுதிகளை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரம் உயர, இரண்டு ரயில் திட்டங்களையும் விரைந்து நிறைவேற்ற
வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.