/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தாயுமானவர் திட்டத்தில் நாளை ரேஷன் பொருள்
/
தாயுமானவர் திட்டத்தில் நாளை ரேஷன் பொருள்
ADDED : மார் 01, 2026 08:16 AM
சேலம்: தாயுமானவர் திட்டத்தில் சேலம் மாவட்டத்தில், 1,766 ரேஷன் கடைகளில் பதிவாகியுள்ள, 1,03,403 கார்டுகளில் உள்ள, 1,11,312 பயனாளர்களுக்கு, பொது வினியோக திட்டப்பொருட்கள் வீடு தேடி சென்று வினியோகிக்க வழி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மார்ச் வினியோகம், 2(நாளை), 3ல் வினியோகிக்கப்பட உள்ளது. பயனாளர்கள், அவரவர் இல்லங்களில் இருந்தபடி பெற்று பயன்பெறலாம். மேலும் இத்திட்டம் சார்ந்த பயனாளிகள், மொபைல் எண், மாற்றுத்திறனாளி குறித்த விபரம், ரேஷன் கார்டில் பதிவு செய்தல், முகவரி மாற்றம் ஏதும் இருப்பின் சம்பந்தப்பட்ட குடிமைப்பொருள் தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோருக்கு தெரிவித்து தீர்வு பெறலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

