ADDED : ஜூலை 30, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில், இடைப்பாடி நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
கோட்ட தலைவர் தங்கராசு தலைமை வகித்தார். உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, 41- மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க கோரி, தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். செயலர் கலைவாணன் அந்தோனி பங்கேற்றார்.