தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/டவுன் பஸ் சிறைபிடிப்பு

டவுன் பஸ் சிறைபிடிப்பு

டவுன் பஸ் சிறைபிடிப்பு


ADDED : ஜன 04, 2024 11:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 04, 2024 11:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொளத்துார்: கொளத்துாரில் இருந்து வெள்ளக்கரட்டூருக்கு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. காலையில் இயக்காததால், கொளத்துார் பள்ளிகளுக்கு கிராமப்புற மாணவர்கள், மற்றவர்களின் இருசக்கர வாகனங்களில், 'லிப்ட்' கேட்டு செல்கின்றனர்.

வழக்கமாக, கொளத்துாரில் இருந்து மாலை, 4:30க்கு உக்கம்

பருத்திகாடு வழியே வெள்ளக்

கரட்டூருக்கு பஸ் இயக்கப்படுகிறது. இதில், 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர், கிராமங்களுக்கு செல்வர். நேற்று மாலை, கால் மணி நேரம் முன்னதாக, 4:15க்கு பஸ் வெள்ளக்கரட்டூர் புறப்பட்டு சென்று விட்டது. இதனால் கொளத்துாரில் பள்ளி முடிந்து வந்த மாணவ, மாணவியர், பஸ் இல்லாமல் தவித்தனர்.

இதையறிந்த அப்பகுதி மக்கள், நேற்று மாலை, 5:15 மணிக்கு உக்கம்பருத்திகாடு வந்த பஸ்சை சிறைபிடித்தனர். கொளத்துார் போலீசார், வி.ஏ.ஓ., லோகநாத் பேச்சு நடத்தினர். எனினும் காலை, மாலையில் பள்ளி நேரத்தில் அரசு பஸ் விட வேண்டும் என, மக்கள் கூறியதால் சிறைபிடிப்பு போராட்டம், இரவு, 8:00 மணி வரை நீடித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us