/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின் இணைப்புக்கு லஞ்சம் பெற்ற இருவர் கைது
/
மின் இணைப்புக்கு லஞ்சம் பெற்ற இருவர் கைது
ADDED : நவ 22, 2024 02:15 AM
சேலம்:சேலம், காமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மணிவண்ணன், 40; லேத் பட்டறை வைத்துள்ளார். சொந்த வீட்டின் மேல் தளத்தில் வீடு கட்டி வருகிறார். இதற்கு மின் இணைப்பு மற்றும் மீட்டர் மாற்றி தரக்கோரி, மல்லமூப்பம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். தாமதமானதால் மல்லமூப்பம்பட்டி மின்வாரிய அலுவலகம் சென்று விபரம் கேட்டார்.
அப்போது வணிக ஆய்வாளர் மணி, 46, 'தனக்கு, 3,000 ரூபாயும், போர்மேனுக்கு, 1,000 ரூபாயும் தர வேண்டும்' என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. லஞ்சம் தர விரும்பாத மணிவண்ணன், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகாரளித்தார்.
அவர்கள் திட்டப்படி, மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றார். வணிக ஆய்வாளரிடம், 3,000, போர்மேன் ராதாகிருஷ்ணனிடம், 1,000 ரூபாயை கொடுத்தார். இருவரும் பணத்தை பெற்றபோது, அங்கு மறைந்திருந்த, இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார், இருவரையும் கைது செய்தனர்.