/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கத்தியை காட்டி பணம் பறித்த இருவர் கைது
/
கத்தியை காட்டி பணம் பறித்த இருவர் கைது
ADDED : பிப் 08, 2026 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம் களரம்பட்டி, இட்டேரி ரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்டேஷ், 32, இவர் நேற்று முன்-தினம் இரவு களரம்பட்டி ஆட்டோ ஸ்டாண்ட் பகு-தியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், கத்தியை காட்டி மிரட்டி அவ-ரிடமிருந்து, 6,300 ரூபாயை பறித்து சென்றனர்.
கிச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று களரம்பட்டி, பண்டித நேரு தெருவை சேர்ந்த ரவுடி மாரி, 21, நேதாஜி தெருவை சேர்ந்த ராஜ்கிரண், 27, ஆகியோரை கைது செய்தனர். விக்னேஷ்வரன், 31, என்பவரை தேடி வருகின்றனர்.

