ADDED : ஜன 12, 2026 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: காடையாம்பட்டி, செம்மாண்டப்பட்டியை சேர்ந்-தவர் சாமுராய் குரு. வி.சி., பாசறை அமைப்பாள-ராக இருந்த இவர், ஓமலுார் மாவட்ட செயலராக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்பு விழா, ஓமலுாரில் நேற்று நடந்தது. அவர் பொறுப்பேற்-றதும், நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
தொடர்ந்து வரும் தேர்தலில் ஓமலுார் தொகு-தியில் உள்ள, 365 ஓட்டுச்சாவடிக்கு முகவர்கள் நியமித்தல்; வரும் தேர்தலில், 'இண்டியா' கூட்-டணி வெற்றி பெற தேர்தல் பணியாற்றுதல் என்-பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டன. மேட்டூர் மாவட்ட செயலர் மெய்யழகன், மண்டல துணை செயலர் ஆறுமுகம், இளம் சிறுத்தை மாநில செயலர் வசந்த் உள்ளிட்ட நிர்-வாகிகள் பங்கேற்றனர்.

