sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வவ்வால்களுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்

/

வவ்வால்களுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்

வவ்வால்களுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்

வவ்வால்களுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்


ADDED : அக் 21, 2025 02:02 AM

Google News

ADDED : அக் 21, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார், வவ்வால்கள் வாழ்ந்து வருவதால், கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா, பண்ணப்பட்டி ஊராட்சியில் வவ்வால் தோப்பு என்ற பகுதி உள்ளது. அங்கு வயல் வெளிகளுக்கு நடுவே, அமைந்துள்ள பிரம்மாண்டமான ஆல

மரத்தில், 5,000க்கும் மேற்பட்ட வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன. இரவு நேரங்களில் இரைகளை தேடி பல்வேறு பகுதிகளுக்கு சென்று விட்டு, மீண்டும் அதே ஆல

மரத்தில் வந்து தங்கிவிடும், கடந்த, 115 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ஆலமரத்தில், 5,000க்கும் மேற்பட்ட வவ்வால்கள் வசித்து வருவதால், பட்டாசு வெடித்தால் அச்சம் ஏற்படும் என்பதால், அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்காமல், பல ஆண்டு

களாக இந்த நடைமுறையை

கடைப்பிடித்து வருகின்றனர்.

இதுகுறித்து தோட்டத்து உரிமையாளர் ராஜேந்திரன், 58, கூறுகையில், '' எனது தாத்தா காலத்திலிருந்து, ஆலமரத்தில் வவ்வால்கள் குடியிருந்து வருகின்றன. இரவு நேரம் வெளியே செல்லும் வவ்வால்கள், மீண்டும் மரத்துக்கு வந்து விடும். மரத்தை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட கிராமத்தினர் யாரும் பட்டாசு வெடிக்காமல் உள்ளனர். வெளியூர்களிலிருந்து பண்டிகைக்கு வருவோர், பகல் நேரத்தில் மரத்தில் தொங்கு வவ்வால்களை பார்த்துவிட்டு செல்வது ஆனந்தமாக உள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us