/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை மேட்டூர் அணை மதகில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
/
காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை மேட்டூர் அணை மதகில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை மேட்டூர் அணை மதகில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை மேட்டூர் அணை மதகில் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
ADDED : ஜூலை 27, 2025 01:41 AM
மேட்டூர், கர்நாடகாவின் கபினி அணையின் மொத்த நீர்மட்டம், 65 அடி. நீர் இருப்பு, 19.5 டி.எம்.சி., கே.ஆர்.எஸ்., அணையின் மொத்த நீர்மட்டம், 124.8 அடி. நீர் இருப்பு, 49.5 டி.எம்.சி., கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பருவ மழைக்கேற்ப, நேற்று, கே.ஆர்.எஸ்., அணை நீர்வரத்து, வினாடிக்கு, 25,506 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து, 23,878 கனஅடி உபரிநீர், காவிரியில் வெளியேற்றப்பட்டது. கபினி நீர்வரத்து வினாடிக்கு, 21,798 கனஅடியாக இருந்த நிலையில், 21,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
குறிப்பாக கே.ஆர்.எஸ்., அணை நீர்வரத்து அதிகரித்ததால், அணையில் இருந்து வினாடிக்கு, 30,000 முதல், 50,000 கனஅடி நீர் வெளியேற்ற வாய்ப்புள்ளது. இதனால், கர்நாடகா அணை அதிகாரிகள் சார்பில், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நடப்பாண்டில், 4ம் முறை, நேற்று முன்தினம் நிரம்பியது. அணைக்கு வினாடிக்கு, 25,400 கனஅடி நீர் வந்த நிலையில், நேற்று காலை, 35,400 கனஅடியாக அதிகரித்தது. இரவு, 9:00 மணி முதல், 45,400 கன அடியாக அதிகரித்தது. இதில், 18,000 கனஅடி நீர், மின் உற்பத்தி நிலையங்கள் வழியாகவும், 400 கனஅடி நீர் கால்வாய் வழியாகவும் பாசனத்துக்கு வெளியேற்றப்பட்டது. மீதி, 27,000 கனஅடி உபரிநீர், 16 கண் மதகு வழியே வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில் மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் அறிக்கை: மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் அதிக
பட்சம் வினாடிக்கு, 75,000 கனஅடி உபரிநீர் காவிரியில் திறக்க வாய்ப்புள்ளது. நீர்திறப்பு அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும்.
அதனால் உபரிநீர் வெளியேற்றும் பகுதியில், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். உயிர், உடைமைகளின் பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.