/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயில் சுரங்கப்பால சுவரில் ஆங்காங்கே விரிசல் வழிந்து கொண்டிருக்கும் தண்ணீரால் ஆபத்து
/
ரயில் சுரங்கப்பால சுவரில் ஆங்காங்கே விரிசல் வழிந்து கொண்டிருக்கும் தண்ணீரால் ஆபத்து
ரயில் சுரங்கப்பால சுவரில் ஆங்காங்கே விரிசல் வழிந்து கொண்டிருக்கும் தண்ணீரால் ஆபத்து
ரயில் சுரங்கப்பால சுவரில் ஆங்காங்கே விரிசல் வழிந்து கொண்டிருக்கும் தண்ணீரால் ஆபத்து
ADDED : டிச 16, 2024 03:55 AM
வீரபாண்டி: ரயில்வே சுரங்கப்பால சுவரில் ஆங்காங்கே ஏற்பட்டுள்ள விரிசல்-களில் இருந்து வழிந்து கொண்டிருக்கும் தண்ணீரால் அசம்பா-விதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
சேலம், ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, பழைய சூரமங்-கலம் செல்லும் சாலை குறுக்கே செல்லும் தண்டவாளங்களை கடந்து செல்ல, 20 ஆண்டுகளுக்கு முன் சுரங்கப்பாலம் கட்டப்-பட்டது.
ஆனால் முறையான பராமரிப்பின்றி, பாலத்தின் தரைப்பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் சரி-செய்யப்படவில்லை. இதனால், 24 மணி நேரமும் தண்ணீர் பீறிட்டு வெளியேறி வருகிறது. சில மாதங்களாக பாலத்தின் இரு-புற சுவர்களிலும் ஆங்காங்கே விரிசல் விழுந்து, மழைக்காலங்-களில் தண்ணீர் அருவி போல் கொட்டுவது வாடிக்கையாகி விட்-டது. தற்போது மழைவிட்டு ஒரு வாரத்துக்கு மேலாகியும் சுவர்களில் ஏற்பட்டுள்ள விரிசல்களில், 10 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் வழிந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து வழியும் தண்ணீரால் சுவர் அரிக்கப்பட்டு சேதம் அடையும் அபாயம் உள்ளதால், அசம்பா-விதம் ஏற்படும் முன், சீரமைப்பு பணி செய்ய, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.

