ADDED : ஜூன் 12, 2026 04:22 AM

அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி; பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. இரவு, 7:30 மணிக்கு, இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கி, 45 நிமிடம் கொட்டி தீர்த்தது. வயல்களில் தண்ணீர் தேங்கி-யது. அரளி, நிலக்கடலை சாகுபடிக்கு மழை சாத-கமாக அமைந்ததாக, விவசாயிகள் தெரிவித்தனர்.
வாழப்பாடி, பெரிய கிருஷ்ணாபுரம், அத்தனுார்-பட்டி, பேளூர், குறிச்சி, துக்கியாம்பாளையம் உள்-ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.தாரமங்கலத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் மழை பெய்து, குளிர்ந்த காற்று வீசியது. இதனால் வெயிலில் சிரமப்பட்டு வந்த மக்கள் நிம்மதி அடைந்தனர்.
அதேபோல் சேலம் மாநகரின் பல்வேறு பகுதி-களில் மழை பெய்தது.
