ADDED : நவ 04, 2024 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: தாரமங்கலம், பாப்பம்பாடி, மொரம்புக்காட்டை சேர்ந்தவர் முத்துசாமி, 52. இவரது மனைவி கோவிந்தம்மாள், 49. இவர்களுக்குள் குடும்ப பிரச்னை இருந்தது.
இந்நிலையில் தலைவலியால் பாதிக்கப்பட்ட கோவிந்தம்மாள், கடந்த அக்., 18ல் சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்வதாக புறப்பட்டார். வீடு திரும்பவில்லை. இதுகுறித்து முத்துசாமி புகார்படி தாரமங்கலம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து கோவிந்தம்மளை தேடுகின்றனர்.