ADDED : பிப் 26, 2026 07:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏற்காடு: சேலம் மாவட்டம், ஏற்காட்டில், சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. குறிப்பாக, பகலில் வெயில் சுட்டெரிப்பதால், மலைப்பகுதியில் உள்ள மரங்கள் காய்ந்துள்ளன.
நேற்று காலை, 11:00 மணிக்கு கடும் வெயிலால், ஏற்காடு, நாகலுாரில் உள்ள அரசு மாதிரி பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள புறம்போக்கு நிலத்தில் காட்டுத்தீ ஏற்பட்டது.
இதில், 10 ஏக்கர் அளவில் வனப்பகுதி எரிந்தது. அங்கு சென்ற வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், இரண்டு மணி நேரம் போராடி, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் அரிய வகை மூலிகைகள், மரம், செடி, கொடிகள் எரிந்து நாசமாகின.

