நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம், தாரமங்கலம், தொட்டனுார் பிரிவை சேர்ந்தவர் சோனியா, 35. அருணாசலம்புதுாரில் தையல் கடை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் பணி முடிந்து, இரவு, 7:45 மணிக்கு வீட்டுக்கு செல்ல, அருணாசலம்புதுார் பிரிவில், நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது சங்ககிரி பக்கமிருந்து வந்த, 'ஸ்கார்பியோ' கார் மோதியதில், தலையில் அடிபட்டது.
மக்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். அவரது தாய் சுந்தரி புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.