நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: சேலம், சீலநாயக்கன்பட்டி அருகே எஸ்.நாட்டாமங்கலத்தை சேர்ந்தவர் பிரேம்குமார், 29. மல்லுார் அருகே வேங்காம்பட்டியில் உள்ள தனியார் எண்ணெய் தயாரிக்கும் ஆலையில் வேலை செய்தார். நேற்று மாலை, 5:30 மணிக்கு ஆலையில் டேங்கின் உள்ளே இருக்கும் எண்ணெய் அளவு பார்க்க ஏணியில் ஏறினார்.
அப்போது நிலைதடுமாறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார். மல்லுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

