வீடு கட்டும் பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி பலி
வீடு கட்டும் பணியின்போது தவறி விழுந்த தொழிலாளி பலி
ADDED : ஜூன் 20, 2026 04:57 AM
அ நிறம் | அளவு
சேலம்; சேலம், குகை பஞ்சந்தாங்கி ஏரியை சேர்ந்தவர் நாகராஜ், 52. இவரது மனைவியுடன் தகராறால், நாகராஜ் தனியே வசித்தார்.
கடந்த, 15ல், கருங்-கல்பட்டி முனியப்பன் கோவில் தெருவில் உள்ள வெங்கடேசன் என்பவரின் ஓட்டு வீட்டுக்கு, பனைமரம் அமைக்கும் தச்சுத்தொழிலில் ஈடு-பட்டார். அப்போது சாரம் அறுந்ததில், அவர் தடு-மாறி விழுந்ததால், தலையில் பலத்த அடிபட்-டது. சேலம் அரசு மருத்துவமனையில் அனும-திக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். செவ்-வாய்ப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
