/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மது போதையில் கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி
/
மது போதையில் கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி
ADDED : மார் 17, 2026 04:22 AM
தலைவாசல்: மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த, மரம் அறுக்கும் தொழிலாளி உயிரிழந்தார்.
பெரம்பலுார் மாவட்டம், குன்னம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் அஜித்குமார், 26. மரம் அறுக்கும் தொழிலாளியான இவர், கடந்த மாதம் தலைவாசலில் தங்கியபடி வேலைக்கு சென்று வந்-துள்ளார். நேற்று, இவர் சார்வாய் எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் உள்ள செந்தில் என்பவரது கிணற்றின் அருகில், நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.அப்போது, போதையில் தடுமாறிய அஜித்குமார், தவறி கிணற்றில் விழுந்துள்ளார். 30 அடி தண்ணீரில் உயிருக்கு போரா-டிய நிலையில், அப்பகுதியினர் மற்றும் ஆத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், அஜித்-குமார் இறந்த நிலையில் அவரது உடலை மீட்டு வந்தனர். இதுகு-றித்து, தலைவாசல் போலீசார், வழக்கு பதிவு செய்து,
விசாரணை நடத்தி வருகின்றனர்.

