ADDED : ஆக 07, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அ.பட்டணம், அயோத்தியாப்பட்டணம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சண்முகப்பிரியா அறிக்கை: அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய விவசாயிகளுக்கு, தனிநபர் நிலங்களில் புதர் நீக்கி சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு, 9,600 ரூபாய் வழங்கப்படுகிறது.
சாகுபடி செய்யப்பட்ட நிலங்களில் வரப்பு பயிராக, பயறு வகை பயிர்களை பயிரிட, விதைகள், 5 கிலோ, 200 ரூபாய் மானியத்தில் வழங்கப்படுகிறது. மேலும் மண்வளப்படுத்த உயிர் உரங்கள் ஒன்றரை லிட்டர், 450 ரூபாய் மானியத்தில் வழங்கப்படுகிறது. இதற்கு, அயோத்தியாப்பட்டணம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.