/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காடு மலைப்பாதையில் 'ஸ்கேட்டிங்' செல்லக்கூடாது
/
ஏற்காடு மலைப்பாதையில் 'ஸ்கேட்டிங்' செல்லக்கூடாது
ADDED : டிச 05, 2025 10:50 AM
சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு தினமும் ஏரா-ளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்-றனர். குறிப்பாக சனி, ஞாயிறு உள்ளிட்ட விடு-முறை நாட்களில் கூட்டம் அதிகம் வரும். இந்நி-லையில் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர், ஏற்காடு அடிவாரப்பகுதியில், 'ஸ்கேட்டிங்' சென்றார். இதுகுறித்து வீடியோ காட்சி, சமூக வலைதளங்-களில் நேற்று முன்தினம் பரவியது. அதில் அந்த நபர், 'வளைவுகளில் வேகமாக 'ஸ்கேட்டிங்' செல்-வது, எதிரே வரும் வாகனங்களை மோதுவது போல செல்வது, வேகத்தை கட்டுப்படுத்த முடி-யாமல் வளைவுகளில் மோதுவது போல சென்-றது தெரிந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்ச-மடைந்தனர்.
இதை பார்த்த மாநகர போலீசார், 'ஸ்கேட்டிங்' சென்றவர் குறித்து விசாரிக்கின்றனர். மேலும் ஏற்காடு மலைப்பாதையில் ஸ்கேட்டிங் செல்லக்-கூடாது. மீறி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, போலீசார் எச்சரித்துள்ளனர். தொடர்ந்து கன்னங்குறிச்சி, ஏற்காடு போலீசார், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

