sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரூ.3.50 லட்சத்தை திருப்பி தராததால் தீக்குளிக்க முயன்ற இளம்பிள்ளை தம்பதி

/

ரூ.3.50 லட்சத்தை திருப்பி தராததால் தீக்குளிக்க முயன்ற இளம்பிள்ளை தம்பதி

ரூ.3.50 லட்சத்தை திருப்பி தராததால் தீக்குளிக்க முயன்ற இளம்பிள்ளை தம்பதி

ரூ.3.50 லட்சத்தை திருப்பி தராததால் தீக்குளிக்க முயன்ற இளம்பிள்ளை தம்பதி


ADDED : செப் 30, 2025 02:14 AM

Google News

ADDED : செப் 30, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், இளம்பிள்ளை, கே.கே.நகரை சேர்ந்தவர் அன்பரசு, 32. மனைவி ஜோதி, 28. இவர்களது மகள் தர்ஷினி, மகன் தருண், 7. இவர்கள் நான்கு பேரும் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். அப்போது, ஜோதி பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுக்க முயன்ற போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார்உடனடியாக பறிமுதல் செய்து வி

சாரணை நடத்தினர்.அப்போது அன்பரசு, ஜோதி ஆகியோர் கூறியதாவது: இளம்பிள்ளையை சேர்ந்த கார்த்திகேயன், அவரது தந்தை முருகேசன் ஆகியோர் சேலை விற்று பணம் தருவதாக கூறினர். இதையடுத்து, 3.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 350 சேலைகளை வாங்கி கார்த்திகேயனிடம் கடந்த, 2023ம் ஆண்டில் கொடுத்தோம், ஆனால் இதுவரை பணம் தரவில்லை, இது குறித்து பலமுறை கார்த்திகேயனிடம் கேட்டும், பதில் தராமல் மிரட்டல் விடுத்தார்.

மகுடஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி, பணம் தர சொல்லி அவர்களிடம் தெரிவித்தும் தராமல் ஏமாற்றி வருகிறார். நாங்கள் கடன் வாங்கிய இடத்தில், மிகவும் நெருக்கடி கொடுக்கின்றனர். அசலும், வட்டியும் கட்ட முடியாமல் தவித்து வருகிறோம், தற்போது குடும்பம் நடத்தவே சிரமமாக உள்ளதால், எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியதால் வாழ்வதை விட இறப்பதே மேல், என நினைத்து தற்கொலை செய்ய வந்தோம். இவ்வாறு கூறினர்.

இதையடுத்து போலீசார் சமாதானம் பேசி, அதிகாரியை சந்தித்து மனு வழங்க சொல்லி கூறியதன் அடிப்படையில் மனு கொடுக்க சென்றனர்.






      Dinamalar
      Follow us