/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டிரைவரிடம் மொபைல் திருடிய வாலிபர் கைது
/
டிரைவரிடம் மொபைல் திருடிய வாலிபர் கைது
ADDED : ஏப் 20, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு, அரசங்கன்னியை சேர்ந்தவர் பாபு, 32. லாரி டிரைவர். கடந்த, 9ல், சேலம் எருமாபாளையம் அருகே உள்ள பைபாஸ் சர்வீஸ் சாலையில், லாரியை நிறுத்திவிட்டு உறங்கியுள்ளார். பின் விழித்து பார்த்த போது,
அவரது இரு மொபைல் போன்கள் திருடப்பட்டிருந்தன. அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்து, அம்மாபேட்டை, வித்யா நகரை சேர்ந்த விக்ரம், 22, என்பவரை கைது செய்து, மொபைல் போன்களை மீட்டனர்.