sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நகைக் கடை ஊழியர்கள் விபரம் சேகரித்து வைக்க எஸ்.பி., உத்தரவு

/

நகைக் கடை ஊழியர்கள் விபரம் சேகரித்து வைக்க எஸ்.பி., உத்தரவு

நகைக் கடை ஊழியர்கள் விபரம் சேகரித்து வைக்க எஸ்.பி., உத்தரவு

நகைக் கடை ஊழியர்கள் விபரம் சேகரித்து வைக்க எஸ்.பி., உத்தரவு


ADDED : ஆக 13, 2011 04:39 AM

Google News

ADDED : ஆக 13, 2011 04:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : கடைகளில் வேலைபார்க்கும் ஊழியர்கள் விபரங்களை சேகரித்து வைக்குமாறு, நகை கடை உரிமையாளர்களுக்கு பன்னீர்செல்வம் எஸ்.பி., ஆலோசனை வழங்கியுள்ளார்.

சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் நகை கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.

பன்னீர் செல்வம் எஸ்.பி., கூறுகையில்,'' நகை கடைகளில் தகுதியான பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும். கடையில் எச்சரிக்கை மணி பொருத்த வேண்டும். கடை உள்ளே, வெளியே சுழல் கேமரா, விளக்கு வெளிச்சம் இருக்க வேண்டும்.

கடையில் வேலைபார்ப்பவர்களின் பெயர், முகவரி, போட்டோ, கைரேகைகளை சேகரித்து வைப்பது அவசியம்.

ஊழியர்கள் நடத்தை குறித்து நன்கு அறிந்திருக்கவேண்டும். உரிமையாளர் கடையை பூட்டிவிட்டு செல்லும் போது, நகைகளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கவேண்டும். நகைகளை அறுந்த நிலையில் விற்க முயற்சித்து வருபவர்கள் மீது சந்தேகம் இருந்தால், உடனே அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தெரிவிக்க வேண்டும். முன்பின் தெரியாதவர்களிடம் நகை வாங்க கூடாது,'' என்றார்.








      Dinamalar
      Follow us