sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தமிழகத்தில் வாழும் அகதிகளுக்கும் இலவச திட்டங்கள்: அரசு உத்தரவு

/

தமிழகத்தில் வாழும் அகதிகளுக்கும் இலவச திட்டங்கள்: அரசு உத்தரவு

தமிழகத்தில் வாழும் அகதிகளுக்கும் இலவச திட்டங்கள்: அரசு உத்தரவு

தமிழகத்தில் வாழும் அகதிகளுக்கும் இலவச திட்டங்கள்: அரசு உத்தரவு


ADDED : ஜூலை 11, 2011 10:46 PM

Google News

ADDED : ஜூலை 11, 2011 10:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : இலங்கை அகதிகளுக்கும் இலவச திட்டங்களை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள 117 அகதிகள் முகாமில், 19 ஆயிரத்து 518 குடும்பங்கள் உள்ளன. இதில், 74 ஆயிரத்து 219 பேர் வசிக்கின்றனர். இவர்களுக்கு ரேஷன் கார்டு, டூவீலர் லைசென்ஸ் பெறுவது போன்ற சலுகைகள் கிடைப்பதில்லை. அகதிகளுக்கென வழங்கும் சலுகைகளை மட்டுமே பெற்று வருகின்றனர். எனவே, தமிழகத்தில் வசிக்கும் அகதிகளுக்கு, மற்றவர்களுக்கு வழங்குவதுபோல், சலுகை வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.



சலுகை: இதை ஏற்ற இந்த அரசு, சமூகநலத்துறை மூலம் கிடைக்கும், திருமண உதவி திட்டம், பென்ஷன், கலப்பு திருமண நிதி, மாற்றுத்திறனாளிகள் நிதி என அரசின் அனைத்து இலவச திட்டங்களை அவர்களுக்கும் வழங்குவதற்காக, அரசு விபரங்களை சேகரித்து வருகிறது. விரைவில் அவர்களுக்கும், தமிழக மக்கள் போன்று அனைத்து இலவச திட்டங்களும் கிடைக்கும்.



இது குறித்து அகதிகள் முகாம் அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' முகாம்களில் வசிப்போருக்கு ஒரு சில சலுகைகள் மட்டுமே கிடைத்தன. இந்த அரசு, அவர்களுக்கும் அனைத்து சலுகைகளை வழங்க உத்தரவிட்டது. இதில், கூட்டு குடும்ப வாசிகளுக்கு கூடுதல் அறைகள் கட்டித்தரவும் உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்திற்காக விபரங்களை சேகரித்து வருகிறோம்,'' என்றார்.










      Dinamalar
      Follow us