/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தி.மு.க.,மகளிர் அணிசெயலாளர் சுயே.,யாக போட்டி
/
தி.மு.க.,மகளிர் அணிசெயலாளர் சுயே.,யாக போட்டி
ADDED : செப் 27, 2011 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் பதவிக்கு சீட் கிடைக்காத தி.மு.க.,மகளிர் அணி தலைவி சர்மிளா சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல்செய்தார்.
சிங்கம்புணரி பேரூராட்சி 10வது வார்டு உறுப்பினர் வள்ளிமயில் (எ) சர்மிளா. இவர் தி.மு.க., மாவட்ட மகளிர் தொண்டர் அணி செயலாளராக உள்ளார். பேரூராட்சி தலைவர் பதவிக்கு விருப்ப மனு கொடுத்தார்.தி.மு.க., தலைமை மிதிலா தேவியை வேட்பாளராக அறிவித்துள்ளது.இதை எதிர்த்து வள்ளிமயில் தனது ஆதரவாளர்களுடன் சென்று தலைவர் பதவிக்கு நேற்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.