ADDED : மே 05, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை, : மானாமதுரை அருகே உள்ள நவத்தாவு பகுதியில் சிப்காட் போலீசார் வாகன சோதனை செய்த போது அவ்வழியாக வந்த லாரியை சோதனை செய்தனர்.
அதில் பரமக்குடி அருகே உள்ள வளையனேந்தல் பகுதியிலிருந்து ஐந்தரை யூனிட் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரிந்து லாரியை பறிமுதல் செய்தனர்.மேலும் லாரியில் இருந்த பரமக்குடி அருகே உள்ள கஞ்சியநேந்தல் கிராமத்தைச் பொன்னுச்சாமி மகன் பூபாலன்23, ராமநாதபுரம் தாலுகா கொலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பாலமுருகன் 24 இருவரையும் கைது செய்தனர்.