sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் முதியவர் பலி

/

ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் முதியவர் பலி

ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் முதியவர் பலி

ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் முதியவர் பலி


ADDED : மே 24, 2024 02:32 AM

Google News

ADDED : மே 24, 2024 02:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: காளையார்கோவில் அருகே உள்ள மறவமங்கலம் கிராமத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. காலை 8:00 மணிக்கு அரசு வழிகாட்டுதல்படி மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், விழா குழுவினர் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

முதலில் கிராம கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 450 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 60 மாடுபிடி வீரர்கள் சுற்று வாரியாக களமிறக்கப்பட்டனர். பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் களத்தில் நின்று விளையாடின. போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 7 வீரர்கள் காயமடைந்தனர்.

காளையார்கோவில் அருகே சோலையூர் பாண்டி மகன் வீரப்பன் 60 பலியானார். ஜல்லிக்கட்டையொட்டி 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us