/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நாளை 10ம் வகுப்பு தேர்வு எழுதும் 17,978 பேர்
/
நாளை 10ம் வகுப்பு தேர்வு எழுதும் 17,978 பேர்
ADDED : மார் 25, 2024 05:59 AM
சிவகங்கை சிவகங்கை மாவட்டத்தில் நாளை மார்ச் 26 துவங்கும் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 17 ஆயிரத்து 978 மாணவர்கள் எழுதுகின்றனர்.
தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நாளை துவங்கி ஏப்.8 ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வை சிவகங்கை மாவட்டத்தில் 131 அரசு பள்ளிகள், 35 அரசு உதவி பெறும் பள்ளிகள், 74 தனியார் பள்ளிகள் உள்ளிட்ட 278 பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 853 மாணவர்கள், 9 ஆயிரத்து 125 மாணவிகள், தனித்தேர்வர்கள் 302 பேர் உட்பட 17 ஆயிரத்து 978 பேர் எழுதுகின்றனர். 103 தேர்வு மையங்களில் நடக்கிறது.
இத்தேர்வு கண்காணிப்பில் 103 முதன்மை கண்காணிப்பாளர்கள், 103 துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் மற்றும் பறக்கும் படை குழுவினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

