/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை வாரச்சந்தையில் ஒரு கிலோ பாகற்காய் ரூ.400
/
மானாமதுரை வாரச்சந்தையில் ஒரு கிலோ பாகற்காய் ரூ.400
மானாமதுரை வாரச்சந்தையில் ஒரு கிலோ பாகற்காய் ரூ.400
மானாமதுரை வாரச்சந்தையில் ஒரு கிலோ பாகற்காய் ரூ.400
ADDED : ஜூலை 25, 2024 11:40 PM
மானாமதுரை : மானாமதுரை வாரச்சந்தையில் வாரந்தோறும் தொடர்ந்து விலை உயர்ந்து வரும் சின்ன பாகற்காய் இந்த வாரம் ஒரு கிலோ ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டது
மானாமதுரையில் வியாழக்கிழமை நடைபெறும் வாரச்சந்தையில் மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, இளையான்குடி, சிவகங்கை, பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன பாகற்காய் இந்த வாரமும் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த வாரம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட பட்டர் பீன்ஸ்,சோயா பீன்ஸ் ஆகியவை இந்த வாரமும் ஒரு கிலோ ரூ.280க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ. 120க்கும்,கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தக்காளி ஒரு கிலோ ரூ.80லிருந்து ரூ.100 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் விலை குறைந்து ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டது.
பச்சை மொச்சை ஒரு கிலோ ரூ.80க்கும், அதேபோன்று கடந்த சில வாரங்களாக விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்த காலிபிளவர் பெரியது ஒன்று இந்த வாரம் விலை குறைந்து ரூ.40-க்கும், சிறியது ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டது.