/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
/
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
ADDED : செப் 10, 2024 05:23 AM
சிவகங்கை: சிங்கம்புணரி பகுதியில்5 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோகுல் முருகன் தீர்ப்பளித்தார்.
சிங்கம்புணரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் 29. இவர் கடந்த 2019 மார்ச் 4 அன்று அப்பகுதியில் இருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
திருப்புத்துார் மகளிர் போலீசார், ரமேைஷ கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. வாலிபருக்கு 5 ஆண்டு சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.