/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்டவராயன்பட்டி ரோடு இருவழி சாலையாக ரூ.5.5 கோடி அனுமதி
/
கண்டவராயன்பட்டி ரோடு இருவழி சாலையாக ரூ.5.5 கோடி அனுமதி
கண்டவராயன்பட்டி ரோடு இருவழி சாலையாக ரூ.5.5 கோடி அனுமதி
கண்டவராயன்பட்டி ரோடு இருவழி சாலையாக ரூ.5.5 கோடி அனுமதி
ADDED : ஆக 18, 2024 05:46 AM
திருப்புத்துார் : திருப்புத்துாரிலிருந்து ஆ.தெக்கூர் செல்லும் ரோட்டில் ரூ 5.5 கோடியில் இருவழிச்சாலையாக மேம்படுத்த அனுமதியாகியுள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருப்புத்துாரிலிருந்து பொன்னமராவதி செல்லும்ரோட்டில் ஆ.தெக்கூர்- பொன்னமராவதி இருவழிச்சாலையாக உள்ளது. ஆ.தெக்கூரிலிருந்து - என்.புதுார் வரை 11 கி.மீ. நீளமுள்ள தார் ரோடு கடந்த சில ஆண்டுகளாக ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்டு இருவழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதுவரை ஆ.தெக்கூரிலிருந்து வஞ்சினிப்பட்டி வரை 4 கி.மீ. நீளம் ரூ 5.6 கோடி மதிப்பில் இருவழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது காவனூர் கண்டவராயன்பட்டி மற்றும் உடையநாதபுரம்நெ.புதூர் 2.6 கி.மீ. நீளத்திற்கு ரூ 5.5 கோடியில் இருவழிச்சாலையாக விரிவுபடுத்த நெடுஞ்சாலைத்துறையினர் பணிகள் துவக்க உள்ளனர்.

