sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பெரும்பச்சேரி மேட்டுமடை ஜல்லிக்கட்டில் 600 காளைகள்

/

பெரும்பச்சேரி மேட்டுமடை ஜல்லிக்கட்டில் 600 காளைகள்

பெரும்பச்சேரி மேட்டுமடை ஜல்லிக்கட்டில் 600 காளைகள்

பெரும்பச்சேரி மேட்டுமடை ஜல்லிக்கட்டில் 600 காளைகள்


ADDED : ஜூன் 01, 2024 04:46 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 04:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள பெரும்பச்சேரி மேட்டுமடையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 600க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மேட்டுமடை சமயணசுவாமி கோயில் உற்சவ விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதில் மதுரை ,தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர் ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 600 காளைகள் பங்கேற்றன. 250க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்கள் களம் இறங்கினர்.

வாடி வாசலிலிருந்து கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதனை யாரும் பிடிக்காமல் இருந்தனர். பின்னர் அவிழ்க்கப்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்தனர்.இதில் ஏராளமான மாடுகள் வீரர்களிடமிருந்து தப்பித்து ஓடின.

காயமடைந்தவர்களுக்கு கொம்புக்காரனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களும், ஊழியர்களும் சிகிச்சை அளித்தனர். மாடு பிடி வீரர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us