sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தி.மு.க.,விற்கு எதிராக 70 சதவீத வாக்காளர்கள்: அமைப்பு செயலாளர் பேச்சு

/

தி.மு.க.,விற்கு எதிராக 70 சதவீத வாக்காளர்கள்: அமைப்பு செயலாளர் பேச்சு

தி.மு.க.,விற்கு எதிராக 70 சதவீத வாக்காளர்கள்: அமைப்பு செயலாளர் பேச்சு

தி.மு.க.,விற்கு எதிராக 70 சதவீத வாக்காளர்கள்: அமைப்பு செயலாளர் பேச்சு


ADDED : மார் 01, 2025 06:32 AM

Google News

ADDED : மார் 01, 2025 06:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: தமிழகத்தில் தி.மு.க., விற்கு எதிராக உள்ள 70 சதவீத வாக்காளர்களை கைப்பற்றி, வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற அ.தி.மு.க.,வினர் பாடுபட வேண்டும் என சிவகங்கையில் அமைப்பு செயலாளர் ஏ.கே., சீனிவாசன் பேசினார்.

சிவகங்கையில் அ.தி.மு.க., சார்பில் பூத் கிளை மற்றும் விளையாட்டு வீரர் அணி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.

அமைப்பு செயலாளர் ஏ.கே.,சீனிவாசன் பேசியதாவது:

தி.மு.க.,விற்கு ஆதரவாக 30 சதவீத வாக்காளர்கள் தான் ஓட்டளிக்கின்றனர். ஆனால், 70 சதவீத வாக்காளர்கள் தி.மு.க.,விற்கு எதிராக உள்ளனர்.

அந்த வாக்காளர்களை நம் பக்கம் இழுத்து, வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றிபெற்று ஆட்சி அமைக்க பூத் கமிட்டி நிர்வாகிகள் பாடுபட வேண்டும்.

அதே போன்று வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற வேலைகளை கட்சி பொது செயலாளர் பழனிச்சாமி கவனித்து வருகிறார். தி.மு.க.,வினர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அதிகளவில் போலி வாக்காளர்களை சேர்த்துள்ளனர்.

இது போன்று தென் மாவட்டத்தில் போலி வாக்காளர்கள் சேர்த்தது குறித்து அ.தி.மு.க., அளித்த புகாரில் பல்லாயிரக்கணக்கான போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எனவே தி.மு.க.,வினர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் போலி வாக்காளர்களை சேர்த்துள்ளார்களா என்பதை கட்சியினர் கவனித்து, அவற்றை நீக்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். புதிதாக விளையாட்டு வீரர் அணியில் இளைஞர்களை அதிகம் சேர்க்க வேண்டும்.

விளையாட்டு வீரர் அணிகள் மூலம் அ.தி.மு.க., சார்பில் கிராமப்பற விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்க திட்டமிட்டுள்ளோம், என்றார்.






      Dinamalar
      Follow us