/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பீஹாரைச் சேர்ந்தவர் கொலையில் 2 ஆண்டிற்கு பின் 9 பேர் கைது
/
பீஹாரைச் சேர்ந்தவர் கொலையில் 2 ஆண்டிற்கு பின் 9 பேர் கைது
பீஹாரைச் சேர்ந்தவர் கொலையில் 2 ஆண்டிற்கு பின் 9 பேர் கைது
பீஹாரைச் சேர்ந்தவர் கொலையில் 2 ஆண்டிற்கு பின் 9 பேர் கைது
ADDED : மே 11, 2024 02:30 AM

சிவகங்கை:சிவகங்கை அருகே கடந்த 2 ஆண்டிற்கு முன் பீஹாரைச் சேர்ந்த கிருஷ்ணா சிங் 33, என்பவரை எரித்து கொலை செய்த வழக்கில் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை அருகே வாணியங்குடி செங்கல், சிமென்ட் பிரிக்ஸ் உரிமையாளர் ரமேஷ் 36. இவரது மைத்துனர் செந்தில் பரிந்துரைப்படி பீஹார் மாநிலம், தானே பகாலியா கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணா சிங் 33, அவரது நண்பர் சரத் இருவரையும் 2022 ல் வேலைக்கு சேர்த்தார். மே 15 ல் சிவகங்கை பங்களா தெரு நாகராஜ் மகன் நித்திஷ் 37, என்பவரின் டூவீலரை பீஹாரை சேர்ந்த இருவரும் வாங்கி சென்றனர்.
டூவீலர் விபத்திற்கு உள்ளானதில், இருவரும் காயமுற்றனர். இருவரையும் சிவகங்கை நேருபஜார் ராமையா மகன் சக்திவேல் 29, மீட்டு ரமேஷ் கம்பெனிக்கு அழைத்து சென்றார். ஏற்கனவே ரமேஷ் கம்பெனியில் இருந்த 'மோல்ட் பிளான்ட் மிஷினை' கிருஷ்ணாசிங், சரத் திருடியதாக கூறி, ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் கண்டித்துள்ளனர்.
இம்முன்விரோதம் காரணமாக 2022 மே 15 இரவு 9:00 மணிக்கு, பிரிக்ஸ் கம்பெனி உரிமையாளர் ரமேஷ் 36, நித்திஷ் 37, காந்திவீதி பாண்டி மகன் செந்தில்குமார் 45, நேருபஜார் சக்திவேல் 29, தொண்டி ரோடு சோமையா மகன் கோபி கிருஷ்ணன் 31, சம்பந்தர் தெரு அழகர்சாமி மகன் மோகன்ராஜ் 37, முத்துநகர் தென்னரசு மகன் வெங்கடேஷ் 31, சாக்ளா தெரு ரகீம் மகன் யாசின் 39, காளவாசல் தவமணி 55 ஆகிய 9 பேரும் சேர்ந்து, பீஹாரை சேர்ந்த இருவரையும் கட்டையால் தாக்கினர்.
அதில் சரத் தப்பி சென்றார்.
பலத்த காயத்துடன் இருந்த கிருஷ்ணா சிங்கை கம்பெனியில் வைத்து கட்டி போட்டனர். மறுநாள் செந்தில்குமார் வந்து பார்த்தபோது, கிருஷ்ணாசிங் இறந்து கிடப்பதை அறிந்தார்.
பின்னர் அவர்கள் 9 பேரும் சேர்ந்து கிருஷ்ணா சிங் உடலை போர்வையால் கட்டி, காரில் கடத்தி கீழக்குளம் நெம்மேனி அருகே உடையனை கண்மாய் கரையில் போட்டு உடலில் டீசலை ஊற்றி எரித்தது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. இவர்கள் 9 பேரையும் சிவகங்கை தாலுகா போலீசார் கைதுசெய்தனர்.