/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பட்டதாரி இளைஞருக்கு ரூ.1 லட்சம் மானியம்
/
பட்டதாரி இளைஞருக்கு ரூ.1 லட்சம் மானியம்
ADDED : ஜூலை 12, 2024 04:30 AM
சிவகங்கை: பட்டதாரி இளைஞர்களை தொழில் முனைவோராக்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமிபிரபா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
இத்திட்டத்தில் பயன்பெற வயது 21 முதல் 40 க்குள். வேளாண்மையில் இளங்கலை பட்டம். அரசு, தனியார் நிறுவன ஊழியராக இருக்கக்கூடாது. கம்ப்யூட்டர் சார்ந்த அறிவு அவசியம். ஒரு குடும்பத்திற்கு ஒரு பட்டதாரி மட்டுமே இத்திட்டத்தில் நிதி உதவி பெற முடியும்.
இத்திட்ட பயனாளிகள் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்க கூடிய திட்டங்களின் படி சுய தொழில்கள் நிறுவ வேண்டும். இது குறித்த கூடுதல் விபரங்களை https://agriinfra.dac.gov.in இணைய தள முகவரியில் அறியலாம்.
பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுநிறுவனம் முறைப்படுத்தும் திட்டம் குறித்து விபரம் அறிய https://pmfme.mofpi.gov.in இணையதளத்தில் பார்க்கலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற 10 மற்றும் பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு சான்று, ஆதார், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், கடன் ஒப்புதல் ஆவணம், தொழில் குறித்த விபரங்களுடன் விண்ணப்பித்து, அந்தந்த வட்டார உதவி இயக்குனரிடம் ஒப்படைக்க வேண்டும்.