ADDED : ஆக 05, 2024 07:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை அருகே அன்னவாசல் ராமநாதசுவாமி கோயிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
இக்கோயிலில் நேற்று அதிகாலை சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம் உட்பட நவ திரவிய அபிேஷகம் செய்தனர். உற்ஸவருக்கு அலங்காரம் செய்து, கோயில்முன் மண்டபத்தில் எழுந்தருளினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழா ஏற்பாட்டை கோயில் நிர்வாகிகள், கிராமத்தினர் செய்திருந்தனர்.
இளையான்குடி: குறிச்சி காசி விஸ்வநாதர் கோயிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கி, சிவலிங்கம் மீது காசி தீர்த்தம் ஊற்றி வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.