sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சேங்கை ஊரணியில் சேதமாகும் பண்டை கால பொருட்கள்

/

சேங்கை ஊரணியில் சேதமாகும் பண்டை கால பொருட்கள்

சேங்கை ஊரணியில் சேதமாகும் பண்டை கால பொருட்கள்

சேங்கை ஊரணியில் சேதமாகும் பண்டை கால பொருட்கள்


ADDED : ஆக 05, 2024 07:21 AM

Google News

ADDED : ஆக 05, 2024 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி சேங்கை ஊரணியில் இயந்திரங்களை கொண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் பண்டைய கால பொருட்கள் சேதமடைவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

திருப்பாச்சேத்தி அய்யனார் கோயில் எதிரே வடக்கு கண்மாயை ஒட்டி இருந்த சேங்கை ஊரணியை பலரும் ஆக்கிரமித்து விவசாயம் செய்திருந்தனர். நீதிமன்ற உத்தரவையடுத்து மீட்கப்பட்ட சேங்கை ஊரணியில் வேலை உறுதி திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.

தூர்வாரும் பணியின் போது சுடுமண் உறைகிணறு, முதுமக்கள் தாழி, பானை ஓடுகள் கிடைத்தன. கடந்த இரு நாட்களாக சேங்கை ஊரணியில் இயந்திரம் மூலம் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனால் பண்டைய கால பொருட்கள் மேலும் சேதமடையும். எனவே வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மூலம் துார்வார வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது, வேலை உறுதி திட்ட பணிகள் மூலமே துார்வாரும் பணி நடக்கிறது. கரை அமைக்கும் பணிகள் மட்டுமே இயந்திரம் மூலம் நடக்கிறது.

ஆக்கிரமிப்புகளை அகற்றியதால், பாதிக்கப்பட்டவர்கள் தேவையற்ற புகார்களை கிளப்புகின்றனர், என்றார்.






      Dinamalar
      Follow us